உள்ளூர் செய்திகள்

ஒசூரில்2 பெண்கள் மாயம்

Published On 2023-03-16 15:12 IST   |   Update On 2023-03-16 15:12:00 IST
  • கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீ டு திரும்பவில்லை.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள பெரியகுதி பகுதியை சேர்ந்த 17வயது இளம்பெண். கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீ டு திரும்பவில்லை.

அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் இதே பகுதியை சேர்ந்த பிரசன்னகுமார் (வயது23) என்பவர் கடத்தி சென்றதாக ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண்னின் பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் ஒசூர் அருகே உள் நல்லூர் பகுதியை சேர்ந்த தசரதன்(வயது51), இவரது மனைவி ரேவதி (37), இவர் கடந்த 14-ம் தேதி தனது குழந்தையை பள்ளி வேனில் அனுப்பி விட்டு வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை.

இதனால் அச்சமடைந்த தசரதன் அட்கோ போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News