உள்ளூர் செய்திகள்

சிட்டுக்குருவிகளுக்கான கூண்டுகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்.

நாகையில், சிட்டுக்குருவிகளை மீட்டெடுக்க இலவசமாக கூண்டு வழங்கல்

Published On 2023-03-20 09:07 GMT   |   Update On 2023-03-20 09:07 GMT
  • சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.
  • பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை ஜி.ராஜ சரவணன் இந்த சின்னஞ்சிறு குருவியை மீட்டெடுப்போம் எனக் கூறி இலவசமாக சிட்டுக்குருவிக் கூண்டை அனைவருக்கும் வழங்கி வருகிறார்.

ஆண்டு தோறும் மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக்குருவி தினமாக உலகம் எங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த இனத்திற்குப் பிறகு இந்த குருவிகள் ஆனது தனது இனத்தை பெருக்கும் கால சூழலுக்கு வருகிறது.

அதனால் இந்த தேதியை தொடங்கி நம் சிட்டுக்குருவி தினமாக நாம் கடைபிடித்து வருகிறோம்.

இந்த சின்னஞ்சிறு சிட்டுக்குருவியை மீட்டெடுப்பதற்கான ஒரு முறையை கண்டுபிடித்து அந்த முறையில் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறையே இந்த சின்னஞ்சிறு குருவிக்கு கூடு அமைத்து கொடுக்கும் முறையாகும்.

இந்த முறையை பயன்படுத்தி கடந்த ஓராண்டாக ஸ்ரீ ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளுக்கான கூண்டு அமைத்து அதில் அந்த குருவி இனங்கள் குடியேறி தனது இனத்தை பெருக்கிக் கொண்டது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

நாகப்பட்டினத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ ஆறுவடை தர்ம சிந்தனை அறக்கட்டளை இதன் இயற்கை சார்ந்த விஷயங்களுக்காக ஸ்ரீ அறுபடை பசுமைச் சிறகுகள் என்ற அமைப்பினை செயல்படுத்தி வருகிறோம்.

இந்த அமைப்பின் மூலமாக சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.

இதில் 60% க்கு மேலான கூண்டுகளில் இந்த குருவிகள் குடியேறிய தன் இனத்தை பெருக்கிக் கொண்டு உள்ளது.

தன்னார்வலர்கள் எங்களை அணுகி கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக இந்த சின்னஞ்சிறு குருவிக்கான கூட்டினை பெற்று செல்லலாம். 10 ஆயிரம் கூண்டுகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

வரும் கோடை காலத்தை மனதில் கொண்டு சிட்டுக்குருவிகளுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் வைப்பதற்கு என மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.

இந்த பாத்திரம் வழங்குவதில் மூன்று விதமான உள்நோக்கம் எங்களுடன் உள்ளது ஒன்று பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல். குருவி இனங்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் ஏதுவாக இந்த பாத்திரங்களை அமைத்தல்.

அழிந்து வரும் ஒரு தொழிலான மண்பானை செய்யும் தொழிலே ஊக்கப்படுத்துதல் என்ற மூன்று விதமான கருத்துக்களை மனதில் கொண்டு இந்த திட்டத்தினை தொடங்கி இருக்கிறோம்.

இயற்கை ஆர்வலர்கள் தங்களுக்கு சிட்டுக்குருவிக்கான கூண்டு, பறவைகளுக்கான நீர் வைக்கும் பாத்திரம் தேவையெனில் எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது முகவரியினை பதிவு செய்து இந்த இரண்டு பொருட்களையும் கட்டணம் இல்லாமல் இலவசமாக பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்.

இந்த சின்னஞ்சிறு குருவினை மீட்டெடுப்போம்.

Tags:    

Similar News