உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.

நாகையில், விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

Published On 2023-01-31 07:16 GMT   |   Update On 2023-01-31 07:16 GMT
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் சைக்கிள் ஓட்டி வந்து போட்டியை தொடங்கி வைத்தார்.
  • பரவை, பாப்பாகோயில் உள்ளிட்ட பகுதி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் வரை போட்டி நடந்தது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனை சார்பாக போதை பழக்கங்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

21 கிலோமீட்டர், 10.5 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

செருதூர் முதல் தெத்தி வரை 21 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் போட்டியை புத்தூரில் இருந்து பால்பண்ணைசேரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேம்ப் அலுவலகத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் சைக்கிள் ஓட்டி வந்து தொடங்கி வைத்தார்.

வேளாங்கண்ணி, பரவை, பாப்பாகோயில் உள்ளிட்ட பகுதி வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த போட்டியை, வழி நெடுகிலும் சாலையின் இருபுறம் நின்ற ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்ததனர்.

மேலும் போட்டியில் பங்கு பெற்றவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

Tags:    

Similar News