உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி.

மயிலாடுதுறையில், நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்- கலெக்டர் தகவல்

Published On 2023-04-12 16:44 IST   |   Update On 2023-04-12 16:44:00 IST
  • மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
  • நாளை (வியாழக்கிழமை) காலை 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வியாழக் கிழமைகள் தோறும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இணை இயக்குநர் சுகாதார பணிகள் ஆகிய துறைகளை கொண்டு மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நாளை 13-ந்தேதி காலை 11.00 மணி அளவில் வளாகத்தில் வருவாய் மாற்றுத்திறனாளி களுக்கான மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் சிறப்பு குறை தீர்க்கும் அலுவலகத்தில் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில்மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவையை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறும், மேலும் இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் அளிவிலான தற்போதைய போட்டோ 1. கைப்பேசி எண். ஆகிய ஆவணங்களுடன் விண்ண ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News