உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

கும்பகோணத்தில், விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு

Published On 2023-09-20 09:46 GMT   |   Update On 2023-09-20 09:46 GMT
  • முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
  • போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் நேரடி மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் பகுதியில் 87 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. பின்னர், விநாயகர் சதுர்த்தி நாளிலேயே 40 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

இந்நிலையில் கும்ப கோணம் மகாமகக்குளம் பகுதியில் இருந்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்ய ப்பட்டிருந்த 47 விநாயகர் சிலைகளை மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு நாகேஸ்வ ரன்கோவில் கீழவீதி, வடக்கு வீதி, காந்தி பூங்கா, மடத்து தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்க ப்பட்டன.

இதில் பா. ஜனதா கட்சியின் அறிவு சார்பு பிரிவின் மாநில தலைவர் கார்த்திகேயன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன், பா.ஜனதா மாவட்ட தலைவர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் நேரடி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கீர்த்திவாசன் (கும்பகோணம்), ஜாபர்சித்திக் (திருவிடை மருதூர்), பூரணி (பாபநாசம்) உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News