உள்ளூர் செய்திகள்

சவுண்டம்மன் கோவிலில் அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையத்தில் நவராத்திரி விழா

Published On 2022-10-05 10:25 GMT   |   Update On 2022-10-05 10:25 GMT
  • காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
  • பக்தர்க–ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

குமாரபாளையம்:

நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சேலம் சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆரா–தனைகள் நடத்தப்பட்டன. பக்தர்க–ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News