உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாமை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்த போது எடுத்தப்படம்.

குமாரபாளையத்தில் பயிற்சி முகாமை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

Published On 2022-10-12 09:34 GMT   |   Update On 2022-10-12 09:34 GMT
  • அரசு பி.எட்.கல்லூரியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
  • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

குமாரபாளையம்:

குமாரபாளையம் அரசு பி.எட்.கல்லூரியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். இதில் பள்ளிபாளையம் வட்டார அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் 268 பேர் பங்கேற்றனர்.

இதில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News