உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, உறுதி மொழி வாசிக்க, அதை திரும்ப கூறி அனைத்து துறை அரசு ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கிருஷ்ணகிரியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Published On 2022-08-19 15:16 IST   |   Update On 2022-08-19 15:16:00 IST
  • கடைபிடித்தல் தொடர்பான “சத்பவ்னாதி வாஸ்” நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
  • நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, உறுதி மொழி வாசிக்க, அதை திரும்ப கூறி அனைத்து துறை அரசு ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் பிராந்திய மக்களிடம் தேசிய மற்றும் வகுப்புவாத ஒற்றுமையை ஊக்குவித்தல் மற்றும் கடைபிடித்தல் தொடர்பான "சத்பவ்னாதி வாஸ்" நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, உறுதி மொழி வாசிக்க, அதை திரும்ப கூறி அனைத்து துறை அரசு ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வேடியப்பன், குமரேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) சண்முகம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News