கிருஷ்ணகிரியில் குடோனில் பதுக்கிய 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல்- ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நகர்மன்ற தலைவர் அதிரடி நடவடிக்கை
- நகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க நகர்மன்ற தலைவர் உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நக ராட்சியை பிளாஸ்டிக் இல்லா நகராட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக, நகராட்சி மூலம் பல்வேறு விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து, மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என நகரில் வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் அறிவு றுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தடையை மீறி சிலர் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள கடைகளில் நேற்று நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமையில் நகராட்சி ஆணையாளர்(பொ) சரவணன், சுகாதார அலு வலர்கள் மோகனசுந்தரம், துப்பரவு ஆய்வாளர்கள் சந்திரகுமார், உதயகுமார், கோவிந்தராஜ், துப்பரவு மேற்பார்வையாளர்கள் சரவணன், எஸ்.சரவணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கார்நே சன் திடலுக்கு செல்லும் சாலையில் குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ஆய்வுக்குழுவினர், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தனர். மேலும், குடோன் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிக்காராம்(30) என்பவருக்கு எச்சரிக்கை விடுத்தும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க நகர்மன்ற தலைவர் உத்தரவிட்டார்.இது குறித்து நகர்மன்ற தலைவர் கூறுகையில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மண், நீர், காற்று மாசுபடுகிறது. இத்தகைய பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி நகராட்சி யிலும் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி மஞ்சள்பையை பயன்படுத்த வேண்டும் என்றார்.