உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில், நாளை அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-20 15:11 IST   |   Update On 2023-06-20 15:11:00 IST
  • தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாளை கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெறுகிறது.
  • அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றுகிறார்.

கிருஷ்ணகிரி, ஜூன்.20-

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.அசோக்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், சட்டம் & ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.அசோக்குமார் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றுகிறார்.

எனவே கட்சியின் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை கழக பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News