உள்ளூர் செய்திகள்

திருப்பதி

காவேரிப்பட்டணத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி

Published On 2022-06-18 14:46 IST   |   Update On 2022-06-18 14:46:00 IST
  • காவேரிப்பட்டினத்தில் வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  • மின் கம்பத்தில் ஏறியபோது விபரீதம் நடந்தது.

காவேரிப்பட்டணம்,

காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளி சவுளுரை சேர்ந்தவர் திருப்பதி (வயது 22). இவர் பட்டதாரி.

இந்நிலையில் நேற்று விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சு வதற்காக மின் மோட்டாரை ஆன் செய்துள்ளார். .அப்பொழுது மின்சாரம் வரவில்லை. இதற்காக கம்பத்தின் மீது ஏறும் பொழுது மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து உறவினர்கள் கூறும் போது மின்சார வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இதுபோல உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 3 மாதத்துக்கு முன்பு இதுபோலவே இப்பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் இல்லாதது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவித்தும் அவர்கள் வந்து சரிவர சோதனை செய்வதில்லை என குற்றம்சாட்டி உள்ளனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News