உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை வட்டாரத்தில் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கேற்க அழைப்பு

Published On 2022-09-03 15:27 IST   |   Update On 2022-09-03 15:27:00 IST
  • தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் “நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின்” இயக்கத்தில் பங்கேற்க அழைப்பு.
  • நெல் ரகங்கள் தேவைப்படும் விவசாயிகள் 50 சதவீத மானியவிலையில் பெற்று பயனடையலாம்.

பரமத்தி வேலூர்:

கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது-

தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் "நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின்" கீழ் பாரம்பரிய விதை நெல் ரகங்களான கருப்பு கவுனி மற்றும் தூயமல்லி ரகங்கள் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ளன. எனவே மேற்கண்ட பாரம்பரிய நெல் ரகங்கள் தேவைப்படும் விவசாயிகள் 50 சதவீத மானியவிலையில் பெற்று பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினையோ அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News