உள்ளூர் செய்திகள்

கண்டமங்கலம் பகுதியில் 31 கிராமங்களில் 20-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்

Published On 2022-09-18 08:09 GMT   |   Update On 2022-09-18 08:09 GMT
  • வருகிற 20-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
  • அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை.

விழுப்புரம்:

கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) ஏழுமலை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் வருகிற 20-ந் தேதி மாதா ந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம் பாளையம், பி.எஸ். பாளையம், பள்ளித்தென்னல், நவமால் காப்பேரி, நவ மால்மருதூர், சேஷங்கனூர், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்க மலை, கோண்டூர், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரிய பாபுசமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பா ளை யம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்தி குப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப் புதுப்பட்டு, கரைமேடு, திரு மங்கலம், ரசப்புத்திர பாளையம், வி.பூதூர், பூசாரிப் பாளையம், வெள்ளாழங்குப்பம், அரங்க நாதபுரம், உள்ளிட்ட 31 கிராமங்களுக்கு மின் வினி யோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News