உள்ளூர் செய்திகள்
ஓசூரில் மைனர் பெண்ணை திருமணம் செய்த தருமபுரி வாலிபர் மீது வழக்கு
- கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
- கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.
ஓசூர்,
தர்மபுரி மாவட்டம் தலவாஹள்ளியை சேர்ந்தவர் வல்லரசு (22). இவர், ஓசூர் பாரதியார்நகர் பகுதியை சேர்ந்த 17 வயது உறவுக்கார பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 10-ந்தேதி, பாரதியார்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்ததன்பேரில், போலீசார் வல்லரசு மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.