உள்ளூர் செய்திகள்

ஓசூரில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2022-12-29 14:59 IST   |   Update On 2022-12-29 14:59:00 IST
  • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • பாரதிதாசன் நகரில் கஞ்சா விற்றதாக ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்த ஹரிஷ், ரிஷி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாரதிதாசன் நகரில் கஞ்சா விற்றதாக ஓசூர் தர்க்கா பகுதியை சேர்ந்த ஹரிஷ், ரிஷி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 1000 மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News