உள்ளூர் செய்திகள்
ஓசூர் பஸ்தி நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
- பாகலூர் சாலை பகுதி வழியாக நடந்து சென்றார்.
- தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பஸ்தி நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி பத்மாவதி (வயது 49). இவர் பஸ்தி நகர் 1-வது கிராஸ் பாகலூர் சாலை பகுதி வழியாக நடந்து சென்றார்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க 2 மர்ம நபர்கள் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.பத்மாவதி அருகே வந்தவுடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் நான்கரைபவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி விட்டனர்.
இது குறித்து பத்மாவதி கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.