உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில்: 7 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2022-07-04 07:38 GMT   |   Update On 2022-07-04 07:38 GMT
  • கடலூர் மாவட்டத்தில் 7 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
  • பணம்கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக 4 புகார் கள் பெறப்பட்டு ரூ.2.45 லட்சம் பெற்றுத்தரப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பெண்களின் நலன் காக்க 'லேடிஸ் பர்ஸ்ட்' என்ற திட்டத்தைதொடக்கி வைத்து,82200 06082 என்ற உதவி எண்ணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வெளியிட்டார். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 666 புகார் கள் வரப்பெற்று அதில், 654 புகார் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், சிறார் திருமணம் தொடர்பாக வரப்பெற்ற 7 புகார்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 7 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.

குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி இடையிலான பிரச்சினை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 69புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடும்ப பிரச்சினை, கணவன்-மனைவி இடையிலான பிரச்சினை, பொதுப் பிரச்சினைகள் ,5 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக 113 புகார்களுக்கு மனு ரசீது வழங்கப்பட்டுள்ளது. பணம்கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக 4 புகார் கள் பெறப்பட்டு ரூ.2.45 லட்சம் பெற்றுத்தரப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சினை , மாமியார்-மருமகள் பிரச்சினை , பணம்கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக 467 மனுக்கள் பெறப்பட்டு இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News