உள்ளூர் செய்திகள்

கடலூரில் பெண்ணை மானபங்க படுத்தி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

Published On 2023-05-16 13:56 IST   |   Update On 2023-05-16 13:56:00 IST
  • விக்கி என்பவர் திடீரென்று சுவேதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
  • போலீசார் விக்கி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் சுவேதா (வயது 22). இவர் தனது வீட்டின் முன்பு இருக்கும் குடிநீர் குழாயில் குடிநீர் பிடிப்பதற்காக சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விக்கி என்பவர் திடீரென்று சுவேதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஸ்வேதா தனது வீட்டிற்கு சென்று உள்ளார். இதனை தொடர்ந்து விக்கி சுவேதா வீட்டிற்குள் அத்துமீறி சென்று அவரை தாக்கி மானபங்கம் படுத்தி கொலை மிரட்டல் விடுத்து மேலும் வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விக்கி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News