உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் என்ஜினீயரை மிரட்டி செல்போன் பறிப்பு

Published On 2023-05-09 09:31 GMT   |   Update On 2023-05-09 09:31 GMT
  • நள்ளிரவு 4 பேர் கொண்ட கும்பல் பிரவீன் குமார் அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
  • இதுகுறித்து பிரவீன் குமார் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை,

ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பாபுரத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21). என்ஜினீயரிங் பட்டதாரி.

இவரது தோழி கோவை மீனா எஸ்டேட்டில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த 4-ந் தேதி தோழிக்கு பிறந்தநாள் என்பதால் பிரவீன் குமார், அவரது அறைக்கு சென்றார். பின்னர் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும் மறுநாள் சுற்றுலா செல்ல திட்டமிட்டு பிரவீன் குமார் தனது தோழியின் அறையிலேயே தங்கினார்.

நள்ளிரவு 4 பேர் கொண்ட கும்பல் இவர்களது அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்து அங்கு இருந்து தம்பி சென்றனர்.

இதுகுறித்து பிரவீன் குமார் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போன் மற்றும் பணத்தைப் படித்து சென்ற தூத்துக்குடியை சேர்ந்த விஸ்வா (19), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீலகண்டன் (19) ஆகியோரை கைது செய்தனர்.

தலை மறைவாக உள்ள கஸ்தூரி ரங்கன், கருப்பு என்கிற தினேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.  

Tags:    

Similar News