கோவையில் இளம்பெண்ணுக்கு பிடிக்கததால் வீட்டை விட்டு வெளியேறினார்
- கடிதம் எழுதி வைத்து விட்டு காதலனுடன் சென்ற ஐ.டி. ஊழியர்
- விருப்பம் இல்லாதவருடன் என்னால் வாழ முடியாது என உருக்கம்.
கோவை,
ேதனி மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயது பெண் ஐ.டி.ஊழியர். இவர்கள் தற்போது குடும்பத்துடன் கோவை கோவில்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வாலி பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் இளம்பெ ண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் வாலிபரு டனான காதலை கைவிடு மாறு தங்களது மகளுக்கு அறிவுரை கூறினார். ஆனால் இளம்பெண் காதலை தொடர்ந்து வந்தார். இதனையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து வேறு இடத்தில் மணமகனை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். மேலும் அவர் கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இது இளம்பெண்ணுக்கு பிடிக்க வில்லை. அவர் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நீங்கள் எனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் ஏற்பாடுகளை செய்து வருகிறீர்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. விருப்பம் இல்லாதவருடன் என்னால் வாழ முடியாது. எனவே என்னை யாரும் தேட வேண்டாம். நான் விரும்பிய வாலிபருடன் செல்கிறேன் என எழுதினார். பின்னர் அவர் அவரது காதலனுடன் சென்றார்.
கடிதத்தை பார்த்து இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து கோவில்பாளையம் போலீசில் தங்களது மகளை மீட்டு தரகோரி புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.