உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2022-08-24 14:52 IST   |   Update On 2022-08-24 14:52:00 IST
  • வீட்டுக்கு போதையில் சென்ற திருப்பதியை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
  • வீட்டிலிருந்து வெளியேறிய திருப்பதி விஷம் வாங்கி கொண்டு அதே தாபா ஓட்டலுக்கு சென்று மது வாங்கி அதில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கிருஷ்ணகிரி,

தருமபுரியை அடுத்துள்ள டி.கொல்லுப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் திருப்பதி (வயது 30). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் தனது மனைவியுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

குடிப்பழக்கம் உள்ள திருப்பதி கிருஷ்ணகிரி-தருமபுரி சாலையில் உள்ள தாபா ஓட்டல் ஒன்றில் தினசரி மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபடுவாராம்.

நேற்று இதே போல வீட்டுக்கு போதையில் சென்ற திருப்பதியை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் வீட்டிலிருந்து வெளியேறிய திருப்பதி விஷம் வாங்கி கொண்டு அதே தாபா ஓட்டலுக்கு சென்று மது வாங்கி அதில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News