நெல்வயலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பெண் பலியான பரிதாபம்
- விளை நிலங்களில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலியாகியுள்ளது.
- இரவு நீண்ட நேரமாகியும் வராததால் உறவினர்கள் இவரை பல இடங்களில் தேடினர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி உணவு தேடி ஊருக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாக உள்ளது. இதில் அதிக அளவில் காட்டுயானைகள் தான் ஊருக்குள் வருகிறது. அந்த யானைகள் மனிதர்களை எதுவும் செய்யாமல் தனக்கு தேவையான உணவுகளை மட்டுமே சாப்பிட்டு செல்கிறது.
இந்த நிலையில் மாரண்டஅள்ளி அடுத்த காளி கவுண்டன்கொட்டாய் கிராமத்தில் கடந்த 20-நாட்களுக்கு முன்பு உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த ஒரு பெண் யானை, 2 ஆண் யானை என மூன்று காட்டு யானைகள் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனால் அந்த தோட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர். மேலும் இது போன்று வயலில் மின்கம்பிகளை போட்டு மின்சாரம் பாய்க்க கூடாது என அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.
விவசாய விளைநிலத்தில் சட்டவிரோதமாக மின்சாரத்தை திருடுபவர்க ளையும், வயலில் மின்கம்பி களை இரவு நேரங்களில் வைப்பவர்களை கண்கா ணிக்க மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் மின்வாரியத்துறை, வனத்துறையினர் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விளை நிலங்களில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து மின்சாரம் தாக்கி 3 யானைகள் பலியாகியுள்ளது. அதனால் இனி இதுபோல் எந்த உயிர்களும் போகக்கூடாது என கலெக்டர் மின்வாரி யத்துறை யினருக்கும், வனத்துறையினருக்கும் உத்தரவிட்டார்.
அதில் தினமும் தங்கள் பகுதியில் விவசாயி விளைநிலங்களில் சட்டவி ரோதமாக மின்சாரம் திருடுகிறார்களா? என ஆய்வு செய்து கண்கா ணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதனால் சில நாட்கள் மட்டுமே வனத்துறை, மி ன்வாரியத்துறை ஆகியோர் ரோந்து சென்றனர்.
பின்னர் கலெக்டரின் உத்தரவை மதிக்காமல் காற்றில் பறக்கவிட்டனர். ஆனால் விளைநிலத்தில் சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி 3 யானைகளை தொடர்ந்து மனித உயிரும் பறிபோய் விட்டது.
பஞ்சப்பள்ளி அருகே சொரகொரிக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு. இவரது மனைவி ராமக்காள் (55). இவர் நேற்று முன்தினம் 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
இரவு நீண்ட நேரமாகியும் வராததால் உறவினர்கள் இவரை பல இடங்களில் தேடினர். அப்போது அதே பகுதியில் உள்ள முனிராஜ் என்பவரின் நெல் வயலில் சட்டவிரோதமாக மின்க ம்பத்திலிருந்து மின்சாரத்தை திருடி மின்கம்பிகள் மூலம் வயல்வெளி முழுவதும் பரப்பி உள்ளனர்.
இதை சற்றும் எதிர்பாராத விதமாக அவ்வழியாகச் சென்ற மூதாட்டி ராமக்காள் (55),மின்சார தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அவரது கணவர் ராஜவேலு பஞ்சப்பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக பஞ்சப்பள்ளி போலீசார் ராமக்காள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயி முனிராஜ் என்பவரை கைது செய்தனர்.
மின்வேலியில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.