உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே நிலத்தகராறில் கணவன்-மனைவி தரப்பினர் மோதல்

Published On 2022-09-06 07:00 GMT   |   Update On 2022-09-06 07:00 GMT
  • கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
  • 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது42). இவரது மனைவி பத்மினி(39). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். பத்மினியிடம் அவரது தாய் வீட்டின் 3 சென்ட் வீ்ட்டுமனை மற்றும் 55 சென்ட் நிலத்தை விற்று தர சொல்லி கண்ணன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பத்மினி வயலில் இருந்தபோது கண்ணனும், இவரது மகன்களும் சேர்ந்து பத்மினியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பத்மினி கொடுத்த புகரின் பேரில் கண்ணன், இவரது மகன்கள் மகிமதன், தமிழரசன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் பத்மினியும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து தன்னை தாக்கியதாக கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பத்மினி, இவரது தாயார் பஞ்சவர்ணம் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News