உள்ளூர் செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-03-26 14:30 IST   |   Update On 2023-03-26 14:30:00 IST
  • கலைவாணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு அய்யனாரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார்.
  • நேற்று இரவு வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்:

சேலம் சூரமங்கலம் கவுண்டம்பட்டி அருகே உள்ள சர்க்கரை புளியமரம் அருகில் வசித்து வந்தவர் அய்யனார் (வயது 32). இவருக்கு கலைவாணி ( 28) என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கலைவாணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு அய்யனாரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார். அதில் மனம் உடைந்த அய்யனார் நேற்று இரவு வீட்டில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யனார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News