மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது
- நேற்று மதியம் ரஞ்சித் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
- ஆத்திரம் அடைந்த ரஞ்சித் சுத்தியலை எடுத்து மனைவி ேராஜாவின் தலையில் அடித்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த மாதரசனப்பள்ளி அருகே உள்ள செம்மண் குழி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது30), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா (29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே மனைவியின் நடத்தையில் ரஞ்சித் சந்தேகப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரோஜா கணவரை பிரிந்து தனது நல்லகான கொத்தப்பள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு குழந்தை களுடன் சென்று வசித்து வந்துள்ளார்.
நேற்று மதியம் ரஞ்சித் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்
அப்போது மீண்டும் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித் சுத்தியலை எடுத்து மனைவி ேராஜாவின் தலையில் அடித்தார்.
இதில் படுகாயமடைந்த ரோஜா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து உடலை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்று ரஞ்சித் சரணடைந்தார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டிய வீட்டில் கிடந்த ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் வாக்குமூலம் கூறியதாவது, எனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை நான் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தேன் என்று கூறினார்.
பின்னர் கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.