உள்ளூர் செய்திகள்
போடியில் மனைவியை தாக்கிய கணவர் கைது
- அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
- இதனால் தனலட்சுமி கோபித்துக்கொண்டு விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
மேலசொக்கநாதபுரம்:
போடியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (வயது27). இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர். அலெக்ஸ்பாண்டியன் முனிசிபல் அலுவலகத்தில் தெருவிளக்கு பொருத்தும் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால் தனலட்சுமி கோபித்துக்கொண்டு விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். 2 பேரும் 2 மாதம் சேர்ந்து வாழ நீதிபதி அறிவுரை வழங்கி உள்ளார்.இந்த நிலையில் மீண்டும் தகராறில் ஈடுபட்ட அலெ க்ஸ்பாண்டியன் தனலட்சு மியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார். இது குறித்து போடி நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து அலெக்ஸ்பா ண்டியனை கைது செய்தனர்.