உள்ளூர் செய்திகள்

ஏரியிப் பிணமாக மிதந்த கணவன்-மனைவி கண்ணன் மற்றும் பிரேமா.

விக்கிரவாண்டி அருகே ஏரியில் பிணமாக மிதந்த கணவன்-மனைவி

Published On 2022-12-02 09:03 GMT   |   Update On 2022-12-02 09:03 GMT
  • சம்பவத்தன்று இரவு இவர் தனது மனைவி பிரேமாவுடன் வீட்டி லிருந்து வெளியே சென்றுள்ளார்.
  • நீரில் 2 உடல்கள் மிதப்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தொரவி கிராமம் காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). கோவில் பூசாரி. சம்பவத்தன்று இரவு இவர் தனது மனைவி பிரேமாவுடன் வீட்டி லிருந்து வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன்- மனைவி 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் தொரவி ஏரி நீரில் 2 உடல்கள் மிதப்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அந்த உடல்களை மீட்டு பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் காணாமல் போன கண்ணன் மற்றும் அவரது மனைவி பிரேமா என தெரியவந்தது. விசாரணையில் ஏரியில் தாமரைப்பூ பறிக்க சென்ற பொழுது ஆழமான பகுதி தெரியாமல் இறங்கியதில் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த கண்ணனுக்கு பிரதிக்க்ஷா (8) என்ற மகள் உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News