உள்ளூர் செய்திகள்

வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்த கணவன்-மனைவி கைது

Published On 2023-07-17 09:36 GMT   |   Update On 2023-07-17 09:36 GMT
  • போலீசார் பிருந்தாவன் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • வெங்கடாசலம் (வயது56), அவரது மனைவி ஆகிய 2 பேரும் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்தது தெரியவந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் பிருந்தாவன் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனே அந்த பகுதியில் சோதனை செய்ததில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மோர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் (வயது56), அவரது மனைவி ஆகிய 2 பேரும் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. உடனே கணவன்-மனைவி 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News