உள்ளூர் செய்திகள்

ஆர்.எஸ். ராஜன்.

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தற்காலிக நீக்கம் ரத்து: காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரதம் வாபஸ் - மாநில பொதுச்செயலாளர் அறிக்கை

Published On 2022-11-26 09:27 GMT   |   Update On 2022-11-26 09:27 GMT
  • சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் நடைபெற்றது தான் எங்களை போன்ற மூத்த நிர்வாகிகளை கலங்க வைத்துள்ளது.
  • நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 30-ந் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்ைத சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் அகிம்சை வழியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தோம்.

நெல்லை:

தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ். ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்ப ட்ட சம்பவம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் நடைபெற்றது தான் எங்களை போன்ற மூத்த நிர்வாகிகளை கலங்க வைத்துள்ளது.

இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு காரணமாகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

உண்ணாவிரத போராட்டம்

நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 30-ந் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்ைத சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் அகிம்சை வழியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தோம்.

இதைத்தொ டர்ந்து நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது. ஆனால் அதுவும் சரியாக நடைபெறாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது மட்டும் நடவடிக்கை எடுத்து நீதி சாய்க்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்த கூடாது என்றும் டெல்லியில் இருந்து சிறப்பு குழு வந்துதான் விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது எந்த நடவடக்கையும் எடு க்க கூடாது என்றும் நாங்கள் வலியுறுத்தினோம்.

தினேஷ் குண்டுராவ்

இது தொடர்பாக மேல்மட்ட தலைவர்களை தொடர்பு கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இல்லையென்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்துேவாம் என்று கூறி வந்ேதாம். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது எடுக்கப்பட்ட தற்காலிக நீக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

போராட்டம் வாபஸ்

இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்த காங்கிரஸ் தமிழக மேலிட பொறு ப்பாளர் தினேஷ் குண்டுராவ் வேண்டுகோளுக்கு இணங்க காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 30-ந் தேதி நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News