உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டவர்கள்.

அய்யம்பட்டியில் மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம்

Published On 2023-08-10 06:56 GMT   |   Update On 2023-08-10 06:56 GMT
  • அய்யம்பட்டியில் சமூக நீதிமற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • இதில் டி.எஸ்.பி. சக்திவேல் கலந்து கொண்டு பேசுகையில் போதைப்பொருள் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும்.

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் சமூக நீதிமற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் டி.எஸ்.பி. சக்திவேல் கலந்து கொண்டு பேசுகையில் போதைப்பொருள் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், சுப்பையா, மூர்த்தி மற்றும் அய்யம்பட்டி ஊராட்சி தலைவர் தனலெட்சுமி அண்ணாத்துரை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News