உள்ளூர் செய்திகள்
- தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
- சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தேசத்தலைவர்களை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஓசூர்,
குடியரசு தின விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
பின்னர் கட்சியினர் அனைவரும் தேச ஒற்றுமையை வலியுறுத்தி, கட்சி அலுவலகம் முன்பு மனித சங்கிலியாக கைகோர்த்து நீண்ட வரிசையில் நின்றனர். அப்போது, காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தேசத்தலைவர்களை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக, முரளிதரன் தலைமையில் எம்ஜி.ரோடில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாநகர தலைவர் தியாகராஜன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.