உள்ளூர் செய்திகள்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்கும் ஓட்டல் அதிபர்

Published On 2023-01-03 09:14 GMT   |   Update On 2023-01-03 09:14 GMT
  • திரு நெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் வியா பாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
  • இதனால் 10 ரூபாய் நாண யங்களை வைத்திருப்போர் கவலையில் உள்ளனர்.

கடலூர்:

இந்தியா முழுவதும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. இந்த நாணயங்களை திரு நெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் வியா பாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடலூர் மாவட் டத்தில் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை கண்டாலே எடுத்துஎரிந்து பேசுகிறார்கள். அந்த நாணயங்களை டீக்கடை முதல் பெரிய கடைகள் வரை வாங்குவது கிடையாது.

இதனால் 10 ரூபாய் நாண யங்களை வைத்திருப்போர் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த ஓட்டல் அதிபர் 10 ரூபாய் நாணயங்களை மகிழ்ச்சி யுடன் வாங்கி வருகிறார். இதற்கான அறிவிப்பும் அந்த ஓட்டலில் ஒட்டப் பட்டுள்ளது. இதனை அறிந்த 10 ரூபாய் நாணயங்கள் வைத்திருக்கும் நபர்கள் அந்த ஓட்டலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

Tags:    

Similar News