உள்ளூர் செய்திகள்

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-10-12 09:44 GMT   |   Update On 2022-10-12 09:44 GMT
  • ரோட்டரி சங்கங்களின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • மாணவ மாணவியர், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர்,

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஓசூர் ரோஸ், எலைட் ரோட்டரி சங்கங்களின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த முகாமில், டாக்டர் வைஷ்ணவி மற்றும் டாக்டர் ரம்யா மாணவ மாணவியருக்கு பரிசோதனைகள் நடத்தி மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

முன்னதாக சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, கல்லூரியின் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கவிஞர் மணிமேகலை கலந்து கொண்டு பேசினார்.

கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன், ஆடிட்டர் பாலசுந்தரம், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ், தமிழ்த்துறை பேராசிரியர் வெங்கடேசன், ரோட்டரி சங்க துணை ஆளுனர் தாட்சாயணி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் பேசினார்கள். மாணவ மாணவியர், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News