உள்ளூர் செய்திகள்

ஓசூர், மத்திகிரி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2022-12-07 15:29 IST   |   Update On 2022-12-07 15:29:00 IST
  • கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணை மின் நிலையத்தில், நாளை (வியாழக்கிழமை) உயர் மின்திறன் கொண்ட கம்பிகள் மாற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை, மின்சாரம் இருக்காது.

ஓசூர்,

ஓசூர் மின் வாரிய செயற்பொறியாளர் கிரு பானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணை மின் நிலையத்தில், நாளை (வியாழக்கிழமை) உயர் மின்திறன் கொண்ட கம்பிகள் மாற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை, ஓசூர் காமராஜ் காலனி, அண்ணா நகர், பஸ் நிலையம், ராம்நகர், ஸ்ரீநகர், அப்பாவு நகர், முனீஸ்வர் நகர், துவாரகா நகர், நியூ ஹட்கோ, டைட்டான் இன்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்டு - 1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், பிருந்தாவன் நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், எம்.ஜி ரோடு, அலசநத்தம், நரசிம்மா காலனி, டி.வி.எஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், காடிபாளையம், குதிரேபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகண்டபள்ளி, பொம்மாண்டபள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News