உள்ளூர் செய்திகள்

பணிகளை பிரகாஷ் எம்.எல்.ஏ-மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்

ஓசூர் அரசனட்டி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள்

Published On 2022-08-24 14:50 IST   |   Update On 2022-08-24 14:50:00 IST
  • ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
  • ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தனர்.

ஓசூர்,

ஓசூர் மாநகராட்சி 16-வது வார்டுக்குட்பட்ட அரசனட்டி பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தனர்.

இதில் துணைமேயர் ஆனந்தய்யா, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மண்டல தலைவர்கள் காந்திமதி கண்ணன், ரவி, மாநகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News