ஓசூர் 2-வது சிப்காட் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது.
- ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் தெரிவித்தார்.
ஓசூர்,
ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மின்ப கிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த சிப்காட் பேஸ்-2 பகுதியில் நாளை (செவ்வாய்கிழமை) அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை, சிப்காட் பேஸ் - 2, பத்தலபள்ளி, குமுதேபள்ளி, வெல்பிட் ரோடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் நிறுத்தப்படும்.
இதேபோல்தளி துணை மின்நிலையத்திற்குட் பட்ட தளி, ஜவளகிரி, கும்மளாபுரம், கக்கதாசம்,.அகலக்கோட்டை, தேவகானபள்ளி, அன்னி யாளம், பின்னமங்கலம், ஆறுப்பள்ளி, சி.ஏ.பள்ளி, மற்றும் சுற்றுப்பகுதிகளில் வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) மற்றும் 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களும் உயர் மின்திறன் கொண்ட கம்பிகள் மாற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், இந்த இரு நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இவ்வாறுஅந்தசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.