அரூரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து இல்லம் தேடி கணக்கெடுப்பு பணி
- அரூரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து இல்லம் தேடி கணக்கெடுப்பு பணி துவங்கியது.
- செப் 29ந்தேதி முதல் அக் 12ந்தேதி வரை நடைபெறும்---
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டாரம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் திட்ட இயக்குநர் முகமது நசீர் ஆலோசனைபடி, 34 ஊராட்சிகளில் பணிபுரியும் சுய உதவி குழு பயிற்று நருக்கு மாற்றுத்திற னாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெ டுப்பாளர் பயிற்சி நடைபெற்றது .
இப்பயிற்சி மாவட்ட மாற்றுத்தி றனாளி அலுவலர் தலைமையில், முதன்மை பயிற்சி பெற்ற திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களின் பயிற்றுநரை கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் வட்டார இயக்க மேலாளர் அறிவழகன் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி வரை கணக்கு எடுக்கும் பணி நடைபெற உள்ளது. மகளிர் திட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணிக்காக உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.
எனவே கணக்கெ டுக்கும் பணிக்கு தேவைப்படும் தகவல்க ளை தயக்கமின்றி வழங்கி ஒத்துழைப்பு தருமாறு நிகழ்ச்சியில் கேட்டு கொண்டனர்.