உள்ளூர் செய்திகள்

ஊர்க்காவல் படையினருக்கு அடையாள அட்டையை கூடுதல் கண்காணிப்பாளர் சங்கர் வழங்கினார்.

மீனவர்களை மட்டும் கொண்ட ஊர்க்காவல் படை

Published On 2022-11-05 08:05 GMT   |   Update On 2022-11-05 08:05 GMT
  • மீனவ சமுதாயத்தை சேர்ந்த 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு.
  • சுற்றுலா தளங்களில் கடலோர போலீசாருக்கு உதவியாக பணியாற்றுவார்கள்.

நாகப்பட்டினம்:

கடலோர பாதுகாப்பு காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக முதற்கட்டமாக பணியில் சேர்ந்த 24 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

தமிழக அரசின் அறிவிப்பின்படி, முதன்முறையாக நாகை மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்கள் 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக 45 நாட்கள் பயிற்சி முடித்த ஊர்காவல் படையினருக்கு நாகப்பட்டினத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் அடையாள அட்டைகளை வழங்கினார்‌.

பணியில் நியமிக்கப்பட்ட அனைவரும் வேளாங்கண்ணி மற்றும் பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கடலோர காவல்துறை பாதுகாப்பு போலீசாருக்கு உதவியாக பணியாற்றுவார்கள் என்றும், கடலில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியில் ஈடுபட உள்ளனர்.

குறிப்பாக கடலோரங்களில் நடைபெறும் கடத்தல், அந்நியர்கள் ஊடுருவல்களை கண்காணிக்கும் பணி மற்றும் கடற்கரையோர சோதனை சாவடிகளிலும் உதவியாக பணியாற்றுவார்கள்‌‌.

தமிழகத்திலேயே முதல் முறையாக நாகை மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்யப்படுள்ள நிலையில், மீனவர்கள் மற்றும் கடலோர காவல்துறை போலீசாருக்கு இணைப்பு பாலமாக திகழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News