உள்ளூர் செய்திகள்
நெமிலி, அரக்கோணம் தாலுகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- தொடர் மழையால் நடவடிக்கை
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரக்கோணம் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல சிரமம் அடைய கூடாது என்பதற்காக நெமிலி மற்றும் அரக்கோணம் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.