உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் கடும் பனி- குளிர்

Published On 2023-01-05 14:21 IST   |   Update On 2023-01-05 14:21:00 IST
  • பகல் நேரங்களில் பனி மூட்டம் மற்றும் பனிமூட்டத்தினால் ஏற்படும் கடுங்குளிர் நிலவி வருகிறது.
  • பனிமூட்டமும் கடுங்குளிரும் அதிமாக காணப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது

அரவேணு,

தட்ப வெட்ப மாற்றத்தின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் பனி மூட்டம் மற்றும் பனிமூட்டத்தினால் ஏற்படும் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பெரியவர்கள் என பள்ளி செல்லும் குழந்தைகள் வரை மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிரிலிருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர். மேலும் ஜனவரி மாதத்தின் இறுதியில் இந்த பனிமூட்டமும் கடுங்குளிரும் அதிமாக காணப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News