உள்ளூர் செய்திகள்

குன்னூரில் கனமழை-ரேலியா அணை நிரம்பியது

Published On 2023-07-03 09:52 GMT   |   Update On 2023-07-03 09:52 GMT
  • பொதுமக்களுக்கு ரேலியா அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது.
  • 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஊட்டி

குன்னூா் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு ரேலியா அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அணையில் அங்கு தண்ணீர் இருப்பு, கடந்த சில மாதங்களாக 33 அடி என்ற அளவில் இருந்தது. எனவே குன்னூரில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குன்னூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ரேலியா அணைக்கு நீா் வரத்து அதிகரித்து வருகிறது. அந்த அணையின் ஒட்டுமொத்த கொள்ளளவு 43.6 அடி ஆகும். அங்கு தற்போது 40 அடி என்ற அளவில் தண்ணீர் உள்ளது. இதே போல பெள்ளட்டிமட்டம், கரன்சி தடுப்பணைப் பகுதிகளிலும் நீா் மட்டம் உயா்ந்து உள்ளது.குன்னூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை காரணமாக ரேலியா அணை 40 அடியை தொட்டு உள்ள தால், அங்கு தடையின்றி குடிநீா் வழங்க முடியும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறினா். இது பொது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News