உள்ளூர் செய்திகள்

குன்னூரில் தொடர் மழை - மலைப்பாதையில் மண்சரிவு

Published On 2023-11-22 09:50 GMT   |   Update On 2023-11-23 10:13 GMT
  • போக்குவரத்து பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
  • இதன்காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அருவங்காடு,

குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழையும், பனிப்பொழிவும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அவ்வப்போது கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், பர்லியாறு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது குன்னூரில் இருந்து கோவைக்கு ஒரு சுற்றுலா காரில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் உதவியுடன் சாலையில் கிடந்த மண் குவியல், கற்களை அகற்றி சீர்படுத்தினர். இதன்காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News