- நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்தகாற்று, பலத்த இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- அதனைத் தொடர்ந்து மழை வேகமாக செய்ய ஆரம்பித்து மிக பலத்த மழை இரவு சுமார் 12 மணி வரை பெய்து கொண்டிருந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கூடச்சேரி, ஒத்தக்கடை, குன்னமலை, இரும்பு பாலம், நல்லூர், கந்தம்பாளையம், மணிய னூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பாளையம், சோழ சிராமணி, வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பா ளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், அ. குன்னத்தூர், வடகரை யாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்தகாற்று, பலத்த இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மழை வேகமாக செய்ய ஆரம்பித்து மிக பலத்த மழை இரவு சுமார் 12 மணி வரை பெய்து கொண்டிருந்தது.
இதன் காரணமாக தார் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.
அதேபோல் சுற்று வட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், மண்பானை விற்பனை கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், பலகார கடைகள் , சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் பலத்த மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியா மல் அவதிப்பட்டனர்.
பலத்த மழையால் தார் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது பெய்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.