உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலையில் பெய்த கனமழையின் போது வாகனங்கள் தண்ணீரில் நீந்திச் சென்ற காட்சி.

திண்டுக்கல்லில் வெப்பத்தை விரட்டியடித்த மழையால் மக்கள் நிம்மதி

Published On 2023-07-11 13:06 IST   |   Update On 2023-07-11 13:06:00 IST
  • திண்டுக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், மழை பெய்யாமல் ஏமாற்றி சென்றது.
  • அதன் பிறகு நேற்று மாலையில் சாரலுடன் தொடங்கி இரவு வரை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட த்தில் ஜூன் மாதம் பெய்யும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாகிக் கொண்டே சென்றது. கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், மழை பெய்யாமல் ஏமாற்றி சென்றது.

10-ந் தேதி முதல் படிப்படியாக மழை குறையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென வானம் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது.

மாலை 3.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு சற்று ஓய்ந்த மழை பின்னர் மாலையில் சாரலுடன் தொடங்கி இரவு வரை பெய்தது.

இதனால் கடந்த சில நாட்களாக நகரில் வாட்டி எடுத்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி யடைந்தனர். மழையால் மாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் நனைந்தபடியே வீட்டுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது.

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 91.2 மி.மீ மழை அளவு பதிவானது. திண்டு க்கல் 26.2, கொடைக்கானல் 19.5, பழனி 3, நத்தம் 14, நிலக்கோட்டை 2, வேட சந்தூர் 3.2, காமாட்சிபுரம் 1.4, பிரையண்ட் பூங்கா 18.7 மி.மீ மழை அளவு பதி வானது.

Tags:    

Similar News