உள்ளூர் செய்திகள்

மயங்கி கிடந்தவர் சாவு

Published On 2023-06-26 16:24 IST   |   Update On 2023-06-26 16:24:00 IST
  • ஈரோடு காரை வாய்க்கால் செல்லும் வழியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கி கிடந்தார்.
  • இதுகுறித்து ஈரோடு டவுன் வி.ஏ.ஓ. சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில், டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு காரை வாய்க்கால் செல்லும் வழியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கி கிடந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? போன்ற விவரங்கள் தெரியவில்லை.இதுகுறித்து ஈரோடு டவுன் வி.ஏ.ஓ. சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில், டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News