உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் அருகே கைவிலங்குடன் தப்பியோடிய விசாரணை கைதிக்கு வலை

Published On 2023-08-19 10:53 IST   |   Update On 2023-08-19 10:53:00 IST
  • திருடிய நகைகளை எங்கே வைத்துள்ளார் என விசாரணை நடத்துவதற்காக கஸ்டடி எடுத்தனர்.
  • தனிப்படை அமைத்தும் தப்பியோடிய பாலமுருகனை தேடி வருகின்றனர்.

கொடைரோடு:

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவர் மீது திருட்டு மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் இடுக்கி மாவட்டம் மறையூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் திருடிய நகைகளை எங்கே வைத்துள்ளார் என விசாரணை நடத்துவதற்காக கஸ்டடி எடுத்தனர்.

கடந்த 17ம் தேதி பாலமுருகனை காவலில் எடுத்த போலீசார் திருச்சிக்கு அழைத்து சென்றனர். நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடி அருகே வந்தபோது போலீசாரிடம் பாலமுருகன் டீ சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி அங்கு இறங்கிய போலீசார் பாலமுருகனுக்கு டீக்கடையில் பிரட் மற்றும் டீ வாங்கி கொடுத்தனர். அப்போது திடீரென சிறுநீர் கழிக்கச் செல்வதாக கூறிய பாலமுருகன் கைவிலங்குடன் இருட்டில் தப்பியோடினார்.

இதுகுறித்து நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொடைரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் தனிப்படை அமைத்தும் தப்பியோடிய பாலமுருகனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News