உள்ளூர் செய்திகள்

காரில் குட்கா கடத்தியவர் கைது

Published On 2022-06-13 16:08 IST   |   Update On 2022-06-13 16:17:00 IST
  • 93 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்.
  • ஜூஜுவாடி செக்போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஓசூர்,

ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று ஜூஜுவாடி செக்போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 93 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதன் மதிப்பு ரூ.73,000- ஆகும்.

மேலும் விசாரணையில், தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே தென்கலை கிராமத்தை சேர்ந்த முகமது கனி(35) மற்றும் ரஹீம் ஆகியோர் பெங்களூரிலிருந்து திருச்சிக்கு குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது.இதையடுத்து அவற்றையும், ரூ 2 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் முகமது கனியை கைது செய்தனர்.போலீசாரின் சோதனையின் போது தப்பி ஓடிவிட்ட ரஹீமை தேடி வருகின்றனர்.

Similar News