உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் அருகே பரிதாபம் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-10-02 09:55 GMT   |   Update On 2023-10-02 09:55 GMT
  • மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முனபு இறந்து விட்டார்

பென்னாகரம் அருகே

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரகாசன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புரு (வயது70). இவரது மகன் பழனிசாமி.

இந்த நிலையில் சுப்புரு வின் மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முனபு இறந்து விட்டார். இதன் காரணமாக சுப்புரு துக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று மதியம் சுப்புரு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட பழனிசாமி அவரது தந்தையிடம் கேட்டபோது விவசாயப் பயிர்களுக்கு பயன்படுத்தும் விஷம் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சுப்புருவை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து பழனிசாமி கொடுத்த புகாரின் பேரில் பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News