உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் வருகிற 2-ந் தேதி கிராமசபை கூட்டம்
- கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியை யொட்டி வருகிற 2-ந்தேதி கிராமசபை கூட்டம், அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சித்தலைவர் தலைமையில் நடக்க உள்ளது. இதில் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.