உள்ளூர் செய்திகள்

கிராம சபா கூட்டம் நடந்தது.

இளையாளூரில், கிராம சபா கூட்டம்

Published On 2023-03-24 13:52 IST   |   Update On 2023-03-24 13:52:00 IST
  • சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
  • அரசு நலத்திட்ட பணிகள் நடைபெறுவதில் குறைகள் இருந்தாலுல் தெரிவிக்கலாம்.

தரங்கம்பாடி:

தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில் ஒன்றியம், இளையாளூர் ஊராட்சி, அரங்கக்குடியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரியாபர்வின் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார்.

கிராம நிர்வாக அலுவலர் கவிநிலவரம் முன்னிலை வைத்தனர்.

ஊராட்சி செயலர் புவனேஸ்வரி வரவேற்றார்.

அப்போது சுகாதாரமான நீர் வழங்க வேண்டும்.சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குடி தண்ணீர்களை வீணடிக்க கூடாது.

சிக்கனமாக பயன்படுத்த கொள்ள வேண்டும்.

குறைகள் ஏதாவது இருந்தால் உடனடியாக ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்க வேண்டும்.

அரசு நல திட்ட பணிகள் நடைபெறுவதில் குறைகள் ஏதேனும் இருந்தாலுல் தெரிவிக்கலாம் என ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பி னர்கள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் வார்டு உறுப்பினர் பார்த்திபன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News